செய்திகள்
தற்கொலை

வில்லியனூர் அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

Published On 2021-03-28 15:40 GMT   |   Update On 2021-03-28 15:40 GMT
வில்லியனூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் செல்வம். டிரைவர். இவரது மனைவி ராதா (வயது 35). இவரது மூத்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்த முடிவு செய்தார். ஆனால் பணம் இல்லாததால் விழாவை பிறகு நடத்தலாம் என்று செல்வம் கூறி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

இதில் விரக்தி அடைந்த செல்வம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News