செய்திகள்
வெங்கடேசன்

பள்ளி மாணவி குளிப்பதை படம் பிடிக்க முயன்றவர் கைது

Published On 2021-03-06 07:06 IST   |   Update On 2021-03-06 07:06:00 IST
புவனகிரியில் குளியலறைக்கு குளிக்க சென்ற பிளஸ் 2 மாணவியை படம் பிடிக்க முயன்ற நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புவனகிரி:

புவனகிரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அதேஊரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி வீட்டின் பின்புறம் உள்ள குளியலறைக்கு குளிக்க சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த புவனகிரி அருந்ததியர் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் வெங்கடேசன் என்பவர், மாணவி குளிப்பதை தனது செல்போனில் படம் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். இதைகேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது, வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News