செய்திகள்
பட்டுப்போன மரங்கள்

பட்டுப்போன மரங்களை அகற்ற கோரிக்கை

Published On 2021-02-28 20:24 IST   |   Update On 2021-02-28 20:24:00 IST
காளையார்கோவில் பகுதிகளில் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி - பரமக்குடி நெடுஞ்சாலையின் ஓரங்களில் ஏராளமான பட்டுப்போன மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காளையார்கோவில்:

காளையார்கோவில் பகுதிகளில் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி - பரமக்குடி நெடுஞ்சாலையின் ஓரங்களில் ஏராளமான பட்டுப்போன மரங்கள் உள்ளன. இந்த பட்டுப்போன மரங்கள் எந்நேரமும் சாலையின் குறுக்கே முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே சாலை ஓரங்களில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News