செய்திகள்
கைது

நன்னிலத்தில் குடும்பத்தகராறில் 4 வயது மகனை தீவைத்து எரிக்க முயன்ற தந்தை கைது

Published On 2021-02-27 04:19 GMT   |   Update On 2021-02-27 04:19 GMT
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் குடும்பத்தகராறில் 4 வயது மகனை தீவைத்து எரிக்க முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்கி (வயது 29). இவருக்கும், காயத்திரி என்பவருக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் இருவரிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மனைவி மீதான ஆத்திரத்தில் ராம்கி தனது மூத்த மகன் சாய்சரண் (4) மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்துள்ளார்

இதனால் சிறுவன் அலறி துடித்துள்ளான். இதைக்கண்ட தாய் காயத்திரி மற்றும் அருகில் இருந்தவர்கள் சிறுவன் சாய்சரணை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக காயத்திரி நன்னிலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News