செய்திகள்
ராகுல் காந்தி

புதுச்சேரியில் நாளை கல்லூரி மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார்

Published On 2021-02-16 03:13 GMT   |   Update On 2021-02-16 03:13 GMT
புதுச்சேரியில் நாளை பாரதிதாசன் கல்லூரி மாணவிகளை சந்தித்து ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார்.
புதுச்சேரி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு புதுச்சேரி வருகிறார். புதுவை விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் சோலைநகருக்கு சென்று அங்கு மதியம் 1.30 மணி வரை மீனவப் பெண்களை சந்தித்து பேசுகிறார். அதன்பின் பாரதிதாசன் கல்லூரி மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

பிற்பகல் 3 மணி அளவில் ரோடியர் மில் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின் சென்னை வருகிறார்.
Tags:    

Similar News