செய்திகள்
முதல்வர் பழனிசாமி

திமுகவுக்கு மறைமுகமாக சிலர் உதவி வருகின்றனர்- முதல்வர் பழனிசாமி பேச்சு

Published On 2021-02-09 15:23 GMT   |   Update On 2021-02-09 15:23 GMT
திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர், அதை அதிமுக முறியடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
வேலூர்:

வேலூரில் அதிமுகவின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர், அதை அதிமுக முறியடிக்கும். சசிகலா, டிடிவி தினகரன் குறித்து மறைமுக விமர்சனம் செய்தார்.

அதிமுகவை கைப்பற்றி திமுகவிற்கு மறைமுகமாக உதவ முயற்சிப்பவர்களின் முயற்சி சுக்குநூறாக முறியடிக்கப்படும். சதிவலையை தூள் தூளாக உடைத்து ஜெயலலிதாவின் ஆட்சி தொடர பாடுபடுவோம், 10 ஆண்டுகள் உறுப்பினராக இல்லாத டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற முயற்சித்து வருகிறார். 

டிடிவி தினகரனை நம்பி சென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும். அதிமுகவை கைப்பற்ற நினைப்பவர்களை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் பதவி இழந்து நடுரோட்டில் நிற்கின்றனர். 

ஆக. 25-ஆம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும். எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல், என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார் என்றார்.
Tags:    

Similar News