செய்திகள்
கோப்புபடம்

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் - 167 பேர் கைது

Published On 2021-02-08 18:43 IST   |   Update On 2021-02-08 18:43:00 IST
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 167 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் நடைபெற்றது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகங்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் 120 பெண்கள் உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர்.

Similar News