செய்திகள்
மின்தடை

கூடுவாஞ்சேரி, மறைமலைநகரில் நாளை மின்தடை

Published On 2021-02-08 16:00 IST   |   Update On 2021-02-08 16:00:00 IST
கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
வண்டலூர்:

மறைமலைநகர், கூடுவாஞ்சேரி துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மறைமலைநகர் தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, திருக்கச்சூர், பேரமனூர், சட்டமங்கலம், சிங்கப்பெருமாள்கோவில். காட்டூர், கடம்பூர், களிவந்தபட்டு, நின்னக்கரை, காவனூர், காரணைப்புதுச்சேரி, நெல்லிக்குப்பம் ரோடு, கூடலூர், செங்குன்றம், மல்ரோஜாபுரம், கோவிந்தாபுரம், தைலாவரம், பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு, நந்திவரம், மகாலட்சுமி நகர், கோவிந்தராஜபுரம், கூடுவாஞ்சேரி டவுன், மாடம்பாக்கம், ஆதனூர், ஊரப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும். 

இந்த தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Similar News