செய்திகள்
விபத்து பலி

ராஜபாளையம் அருகே தொழிலாளி பலி

Published On 2021-02-03 19:53 IST   |   Update On 2021-02-03 19:53:00 IST
ராஜபாளையம் அருகே தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் மங்காபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது53). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை நடைபயிற்சிக்காக ராஜபாளையம் - தென்காசி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது யூனியன் அலுவலகம் எதிரே செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் மாரியப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News