செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா

Published On 2021-02-02 23:49 IST   |   Update On 2021-02-02 23:49:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,569ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,569ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 94 ஆயிரத்து 97 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தததில் 16, 524 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

16,307 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 21 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

Similar News