செய்திகள்
சிறுமியை கடத்தி சென்று காதல் திருமணம் செய்த வாலிபர் கைது
விருதுநகர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று காதல் திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் 17 வயது சிறுமியை காணவில்லை என அவரது தாயார், சூலக்கரை போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 22) என்ற வாலிபர் அந்த சிறுமியை காதலித்து வந்ததாகவும், அவளை கடத்திச் சென்று பல்லடத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு விருதுநகர் கொண்டு வந்தனர். பின்னர் ஈஸ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.