செய்திகள்
காரைக்குடி அருகே தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை
காரைக்குடி அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி பாரதி நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிவேதா (வயது 21). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.சம்பவத்தன்று நிவேதாவின் தாயார் உறவினர் ஒருவரின் இல்ல சுப நிகழ்விற்காக வெளியே சென்று விட்டார். அவரது தம்பி வேலைக்கு சென்று விட்டார்., வீட்டில் தனியாக இருந்த நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.