செய்திகள்
கோப்புபடம்

காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-23 13:48 GMT   |   Update On 2021-01-23 13:48 GMT
கோத்தகிரி அருகே காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:

கோத்தகிரி அருகே அரவேனு பேட்டலாடா பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் நிர்மலா(வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அந்த வாலிபர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த துக்கத்தில் நிர்மலா மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, நிர்மலா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News