செய்திகள்
கோப்புபடம்

ஆலங்குடி அருகே நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-19 12:52 GMT   |   Update On 2021-01-19 12:52 GMT
ஆலங்குடி அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆலங்குடி வடகாடு முக்கத்தில் திருவரங்குளம் ஒன்றிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி:

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆலங்குடி வடகாடு முக்கத்தில் திருவரங்குளம் ஒன்றிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விவசாய சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அன்னவாசலில் நடந்தஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நல்லையா தலைமை தாங்கினார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

இதேபோல் அறந்தாங்கியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். இதேபோல் ஆவுடையார்கோவில் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News