செய்திகள்
கைது

கறம்பக்குடி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2021-01-18 10:39 GMT   |   Update On 2021-01-18 10:39 GMT
கறம்பக்குடி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உள் கடைவீதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக தேவராஜ் (வயது36), தங்கவேல் (53) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,550 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News