செய்திகள்
தற்கொலை

பண்ருட்டியில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-18 07:09 GMT   |   Update On 2021-01-18 07:09 GMT
பண்ருட்டியில் குடிபோதையில் இருந்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டியில் இந்திரா காந்தி சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் குடிபோதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த முதியவர் திடீரென தான் அணிந்திருந்த கைலியை கழற்றி, ஓட்டலின் முன்புள்ள கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட முதியவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பண்ருட்டி அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் சதாசிவம் (வயது 55) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாசிவம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News