செய்திகள்
தற்கொலை

சிதம்பரம் அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை

Published On 2021-01-15 10:05 GMT   |   Update On 2021-01-15 10:05 GMT
சிதம்பரம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அண்ணாமலைநகர்:

சிதம்பரம் அருகே உள்ள மடத்தான்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் தீபிகா(வயது 21). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தீபிகா வீட்டு வேலை செய்யாமல் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார். இதை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த தீபிகா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News