செய்திகள்
சிதம்பரம் அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை
சிதம்பரம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அருகே உள்ள மடத்தான்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் தீபிகா(வயது 21). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தீபிகா வீட்டு வேலை செய்யாமல் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார். இதை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த தீபிகா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள மடத்தான்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் தீபிகா(வயது 21). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தீபிகா வீட்டு வேலை செய்யாமல் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார். இதை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த தீபிகா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.