செய்திகள்
திருக்கடையூர் - ஓடக்கரை சாலையில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

திருக்கடையூர் அருகே கனமழையால் சாலையில் உடைப்பு- போக்குவரத்து துண்டிப்பு

Published On 2021-01-13 14:19 GMT   |   Update On 2021-01-13 14:19 GMT
திருக்கடையூர் அருகே கனமழையால் சாலையில் உடைப்பு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக திருக்கடையூர் அருகே ஓடக்கரை சாம்பக்குளம் பகுதி வழியாக செம்பனார்கோவில் செல்லும் சாலையில் உடைப்பு ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

அங்கு சாவைலயின் நடுவே பெரும் பள்ளம் காணப்படுகிறது. இந்த சாலையை திருக்கடையூர், காடுவெட்டி, நடுவலூர், நட்சத்திரமாலை, ரமணியன் கோட்டகம், கண்ணங்குடி, கிள்ளியூர், வெள்ளத்திடல், ராமன்கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை இந்த சாலை வழியாக விற்பனைக்கு எடுத்துச்சென்று வருகிறார்கள். இந்தநிலையில் சாலையில் உடைப்பு ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்னர். மேலும் இந்த சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Tags:    

Similar News