செய்திகள்
தமிழ்ச் செம்மல் விருது அறிவிப்பு- மாவட்ட வாரியாக விருதாளர்கள் பெயர்
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கான விருதாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதில், 2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை-ஜெ.வா. கருப்புசாமி, திருவள்ளூர்-வேணு புருஷோத்தமன், காஞ்சிபுரம்- முனைவர் சு. சதாசிவம், வேலூர்-மருத்துவர் சே. அக்பர் கவுஸர், கிருஷ்ணகிரி-மா. முருககுமரன், திருவண்ணாமலை- முனைவர் இரா. வெங்கடேசன், விழுப்புரம் -பரிக்கல் ந. சந்திரன், கடலூர் -முனைவர் ஜா. இராஜா, பெரம்பலூர் -முனைவர் அ. செந்தில்குமார் (எ) தமிழ்க்குமரன், அரியலூர் -முனைவர் சா. சிற்றரசு, சேலம்- கவிஞர் பொன்.சந்திரன், தருமபுரி -பாவலர் பெரு.முல்லையரசு, நாமக்கல் -திரு. ப. முத்துசாமி, ஈரோடு -முனைவர் கா. செங்கோட்டையன், கரூர் - சி. கார்த்திகா
கோயம்புத்தூர் - எம்.ஜி. அன்வர் பாட்சா, திருப்பூர் -முனைவர் துரை அங்குசாமி, நீலகிரி -ம. பிரபு , திருச்சிராப்பள்ளி -
சோமவீரப்பன், புதுக்கோட்டை - ஜீவி (ஜீ. வெங்கட்ராமன்), சிவகங்கை - இரா. சேதுராமன், தஞ்சாவூர்- திரு. பழ. மாறவர்மன், திருவாரூர் - இராம.வேல்முருகன், நாகப்பட்டினம் -மா. கோபால்சாமி, இராமநாதபுரம் - ஆ. முனியராஜ், மதுரை-முனைவர் போ.சத்தியமூர்த்தி, திண்டுக்கல் - தா. தியாகராசன், தேனி -த. கருணைச்சாமி, விருதுநகர் -கவிஞர் சுரா (எ) சு. இராமச்சந்திரன்‘
திருநெல்வேலி- வீ. செந்தில் நாயகம், தூத்துக்குடி-ச. காமராசு (முத்தாலங்குறிச்சி காமராசு), கன்னியாகுமரி-பா. இலாசர் (முளங்குழி பா. இலாசர்), திருப்பத்தூர்- முனைவர் ச. சரவணன், செங்கல்பட்டு -நந்திவரம் பா. சம்பத் குமார், இராணிப்பேட்டை-கவிஞர் பனப்பாக்கம் கே.சுகுமார், தென்காசி -மு. நாராயணன், கள்ளக்குறிச்சி -சி. உதியன், மயிலாடுதுறை -துரை குணசேகரன்
இவ்விருதுகளை திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் வழங்க உள்ளார்.