செய்திகள்
கைது

கண்ணமங்கலம் அருகே மது, சாராயம் பதுக்கிய 9 பேர் கைது

Published On 2021-01-13 14:19 IST   |   Update On 2021-01-13 14:19:00 IST
கண்ணமங்கலம் அருகே மது, சாராயம் பதுக்கிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வண்ணாங்குளம் குன்றுமேட்டை சேர்ந்த பரசுராமன் (வயது 64), கீழ்நகர் பிரபாகரன் (37), முனியந்தாங்கல் ஜெகநாதன் (45), சந்தவாசல் புஷ்பகிரி வனிதா (44), மல்லிகாபுரம் சரவணன் (39), வீரகோயில் முனியாண்டி (46) ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 83 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் மல்லிகாபுரம் கிராமத்தில் லாரி டியூபில் சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக சுரேஷ் (36), மதுவிற்றதாக அம்மாபாளையம் மாணிக்கம்மாள் (60), காட்டுக்காநல்லூர் காலனியை சேர்ந்த தேவகி ஆகியோரை கைது செய்தனர்.

Similar News