செய்திகள்
கொரோனா தடுப்பூசி

திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பை வரவேற்று நாதஸ்வர இசை நிகழ்ச்சி

Published On 2021-01-09 10:12 GMT   |   Update On 2021-01-09 10:12 GMT
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த மருத்துவ நிபுணர்களை பாராட்டும் வகையிலும் நன்றி செலுத்தும் வகையிலும் திருவண்ணாமலையில் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இசை நிகழ்ச்சி நடத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

திருவண்ணாமலை:

உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் பரவலுக்கு முடிவு கட்டும் வகையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தமிழகம் முழுவதும் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த மருத்துவ நிபுணர்களை பாராட்டும் வகையிலும் நன்றி செலுத்தும் வகையிலும் திருவண்ணாமலையில் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இசை நிகழ்ச்சி நடத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இதுகுறித்து நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் கூறியதாவது:-

கொரோனா அனைத்து தரப்பு மக்களின் வாழ்வையும் சீர் குலைத்து விட்டது. அதற்கு தீர்வு காணும் வகையில் மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு மருந்து கண்டுபிடித்துள்ளனர்.

இது மனித குலத்திற்கு செய்யும் பேருதவி ஆகும். இப்பணியில் ஈடுபட்ட மருத்துவ நிபுணர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்தினோம் என்றனர்.

Tags:    

Similar News