செய்திகள்
நல்லவன்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்
நல்லவன்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே நல்லவன் பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால் நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமலை, காம்பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.