செய்திகள்
கைது

காஞ்சீபுரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

Published On 2021-01-06 07:59 GMT   |   Update On 2021-01-06 07:59 GMT
காஞ்சீபுரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளம் கிழக்கு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றார்.

அப்போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்சேகர் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரொக்கம் ரூ.620-ஐ போலீசார் கைப்பற்றினர்.
Tags:    

Similar News