செய்திகள்
கோப்புபடம்

கடலூர் அருகே காரில் 150 லிட்டர் சாராயம் கடத்தல் - பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2021-01-05 09:59 GMT   |   Update On 2021-01-05 09:59 GMT
கடலூர் அருகே காரில் 150 லிட்டர் சாராயம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக காரில் சாராயம் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பதிவெண் இல்லாமல் வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். 

அதில் அந்த காரில் 5 சாக்கு மூட்டைகளை இருந்தன. பின்னர் சாக்கு மூட்டைகளை சோதனை செய்ததில் சாராய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குறவன்பாளையத்தை சேர்ந்த ராஜா மகள் வனிதா (வயது 33) , கிருஷ்ணமூர்த்தி மகன் சிவமணி (31) என்பதும், புதுச்சேரியில் இருந்து குறவன்பாளையத்துக்கு சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வனிதா, சிவமணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 150 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News