செய்திகள்
புதுப்பேட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது
புதுப்பேட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
புதுப்பேட்டை:
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் பண்டரக்கோட்டை, கோட்லாம்பாக்கம், புதுப்பேட்டை கடைவீதி ஆகிய இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தனித்தனி இடத்தில் நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் புதுப்பேட்டை நண்பர்கள் நகரை சேர்ந்த கோபு (வயது 38), கோட்லாம்பாக்கம் ராஜேந்திரன் (46), பண்டரக்கோட்டை சிவப்பிரகாசம் (37), புதுப்பேட்டை சங்கர் (47) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கோபு உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் பண்டரக்கோட்டை, கோட்லாம்பாக்கம், புதுப்பேட்டை கடைவீதி ஆகிய இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தனித்தனி இடத்தில் நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் புதுப்பேட்டை நண்பர்கள் நகரை சேர்ந்த கோபு (வயது 38), கோட்லாம்பாக்கம் ராஜேந்திரன் (46), பண்டரக்கோட்டை சிவப்பிரகாசம் (37), புதுப்பேட்டை சங்கர் (47) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கோபு உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.