செய்திகள்
கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2021-01-03 21:30 GMT   |   Update On 2021-01-03 21:30 GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.31 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 621 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த தமீம் அன்சாரி சம்சுதீன் (வயது28), தஞ்சாவூரை சேர்ந்த அப்துல் வகாப் (49) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகள் 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.31 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 621 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News