செய்திகள்
மரணம்

ஆரணி அருகே தீயில் கருகி இளம்பெண் பலி

Published On 2021-01-02 18:31 IST   |   Update On 2021-01-02 18:31:00 IST
ஆரணி அருகே தீயில் கருகி இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் பரமேஸ்வரி (வயது 17). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 25-ந் தேதி வீட்டில் அடுப்பில் வெந்நீர் வைப்பதற்காக ஸ்டவ் அடுப்பை பற்றவைத்தார். அப்போது அடுப்பு தீ அவருடைய புடவையில் பட்டு, உடல் முழுவதும் பரவியது. இதனால் அலறிதுடித்த அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News