செய்திகள்
விபத்தில் பலியான கணேசன்.

கொள்ளிடம் அருகே மரத்தில் கார் மோதியதில் முதியவர் பலி

Published On 2020-12-31 19:14 IST   |   Update On 2020-12-31 19:14:00 IST
கொள்ளிடம் அருகே கார் மரத்தில் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சேலத்தில் இருந்து திருக்கடையூருக்கு சாமி கும்பிட வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
கொள்ளிடம்:

சேலம் ரெயிலடி போலீஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் கணேசன். (வயது 61). இவருடைய மனைவி சுலோச்சனா, மகன் சுரேஷ், உறவினர் துளசிராமன். இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூருக்கு சாமி கும்பிடுவதற்காக ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர்.

காரை கணேசனின் மகன் சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை 6 மணி அளவில் சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையி்ல் கொள்ளிடம் மதகடி புத்தூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்த கணேசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த சுலோச்சனா, சுரேஷ், துளசிராமன் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News