செய்திகள்
தடையை மீறி மக்கள் கிராம சபை கூட்டம்: 78 பேர் மீது வழக்கு
மானாமதுரை அருகே தடையை மீறி மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தியது தொடர்பாக 78 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மானாமதுரை:
மானாமதுரை அருகே அன்னவாசல் கிராமத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை தலைமையிலும், கல்குறிச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி தலைமையிலும் தி.மு.க. சார்பில் தடையை மீறி மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இது குறித்து மானாமதுரை, சிப்காட் போலீசார் 78 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.