செய்திகள்
முருகன்

தூசி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Published On 2020-12-28 12:52 IST   |   Update On 2020-12-28 12:52:00 IST
தூசி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூசி:

காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 39), எலக்ட்ரீசியன். இவர், அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் டிஜிட்டல் ஒளிர்ப்பலகை (நியான் லைட்) வடிவமைக்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 6 மணியளவில் அவர் தூசி அருகில் உள்ள மாங்கால் கூட்டுரோடு சிப்காட் எதிரே ஒரு பேக்கரி கடையில் டிஜிட்டல் ஒளிர் பெயர் பலகை பொருத்தும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட முருகனை சக ஊழியர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை, பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். 

தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாகின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News