செய்திகள்
கைது

போளூரில் சாராயம் விற்ற மூதாட்டி கைது

Published On 2020-12-27 17:33 GMT   |   Update On 2020-12-27 17:33 GMT
போளூரில் சாராயம் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:

போளூர் டவுன் இந்திரா நகரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்.

அப்பகுதியில் சாராயம் விற்ற குப்பு (வயது 67) என்ற மூதாட்டியை கைது செய்து அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தார்.
Tags:    

Similar News