செய்திகள்
விபத்து பலி

பள்ளிகொண்டா அருகே வேன் கவிழ்ந்து டிரைவர் பலி

Published On 2020-12-27 22:57 IST   |   Update On 2020-12-27 22:57:00 IST
பள்ளிகொண்டா அருகே வேன் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தை இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 30), கும்பகோணம் சீனிவாசநல்லூர் பகுதியைச் சேர்ந்த நவாப்ஜான் மகன் ஆசிக் (33). இருவரும் ஒரே பார்சல் வண்டியில் டிரைவராக வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பார்சல்களை ஏற்றிக்கொண்டு பெங்களூருவை நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது வேனை ரஞ்சித்குமார் ஓட்டினார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கிங்கினிஅம்மன் கோவில் அருகே அதிகாலை 4 மணிக்கு வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை பள்ளத்தில் கவிழ்ந்தது. இ்தில் ஆசிக் சம்பவ இடத்திலேயே பலியானார். ரஞ்சித்குமார் காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News