செய்திகள்
விபத்து

சேத்துப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 2 பேர் பலி

Published On 2020-12-26 06:13 GMT   |   Update On 2020-12-26 06:13 GMT
சேத்துப்பட்டு அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த பெரிய கொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்திவர்மன் (வயது 65). ஓய்வுபெற்ற அலுவலர். இவர் சேத்துப்பட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல நந்திவர்மன் நேற்று காலை சேத்துப்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

நிர்மலா நகரை சேர்ந்தவர்கள் ராஜா (19), ரேணு (30), மஞ்சுளா (27). மரம் வெட்டும் தொழிலாளர்கள். இவர்கள் நேற்று காலை மரம் வெட்டுவதற்காக மஞ்சுளாவின் 2 வயது குழந்தை வள்ளிக்கண்ணுவுடன் ஒரே மோட்டார்சைக்கிளில் உலகம்பட்டு கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தனர்.

கெங்கைசூடாமணி அண்ணாநகர் பகுதியில் வந்தபோது நந்திவர்மன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிளும், ராஜா உள்பட 4 பேர் வந்த மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.

இதில் இரண்டு மோட்டார்சைக்கிளில் வந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் நந்திவர்மன், ராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். வள்ளிக்கண்ணு, ரேணு, மஞ்சுளா ஆகிய 3 பேர் படுகாயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீசார் விரைந்து சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News