செய்திகள்
கோப்புபடம்

காட்பாடியில் லாரிமோதி ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் பலி - போலீசார் விசாரணை

Published On 2020-12-24 13:23 GMT   |   Update On 2020-12-24 13:23 GMT
காட்பாடியில் லாரிமோதி ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:

காட்பாடி லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 65). ஓய்வு பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர். இவர் நேற்று வேலூர் சென்று விட்டு காட்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். காங்கேயநல்லூர் கூட்ரோடு சாலையில் வந்தபோது, அந்தவழியாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த தாமோதரன் படுகாயம் அடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காட்பாடியில் இருந்து வேலூர் சென்ற வாகனங்களும், வேலூரிலிருந்து காட்பாடி நோக்கி வந்த வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றன.

தகவலறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜீவானந்தம் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போக்குவரத்தையும் சீரமைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News