செய்திகள்
பரதராமியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- பெண் பலி
பரதராமியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற பெண் மீது லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த பரதராமி புட்டவாரிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், விவசாயி, அவரது மனைவி கவிதா (வயது 34). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் கவிதா மோட்டார் சைக்கிளில் தனது கிராமத்தில் இருந்து பரதராமி நோக்கி சென்றார். அப்போது சித்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த லாரி திடீரென கவிதா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த கவிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கவிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.