செய்திகள்
குடியாத்தத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
குடியாத்தத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று குடியாத்தத்தில் பல இடங்களில் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது பிச்சனூர் தியாகி குமரன் தெருவில் லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டு இருந்ததாக அறிவழகன் (வயது 44), குடியாத்தம் நெல்லூர்பேட்டை நீலிகொல்லை தெருவில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக வரதராஜன் (56) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.