செய்திகள்
நரிக்குடி அருகே மழையால் நெற்பயிர்கள் சேதம்- இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
நரிக்குடி அருகே மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி:
நரிக்குடி அருகே உள்ள எம்.புதுக்குளத்தில் தொடர்ந்து மழை பெய்தது. ஆதலால் அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளன.
அத்துடன் தேங்கியுள்ள மழைநீரில் நெற்பயிர்கள் சாய்ந்து முளைக்க தொடங்கி விட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கருப்பசாமி, வைரவன் ஆகியோர் கூறியதாவது:-
காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையினால் இங்கு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து முளைத்து விட்டன.
நாங்கள் பயிர் சாகுபடி செய்ய நகைகளை அடகு வைத்து கடன் பெற்று உள்ளோம். கடன் வாங்கி கஷ்டப்பட்ட வளர்த்து வந்த நெற்பயிர்கள் எல்லாம் தற்போது பெய்த மழையினால் சாய்ந்து விட்டன. தண்ணீர் வயல்களில் தேங்கி நிற்பதால் முளைக்க ஆரம்பித்து விட்டது.
கடினப்பட்டு சாகுபடி செய்ய செலவுத்தொகையை கூட எடுக்க முடியாத நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியை பார்வையிட்டு சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நரிக்குடி அருகே உள்ள எம்.புதுக்குளத்தில் தொடர்ந்து மழை பெய்தது. ஆதலால் அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளன.
அத்துடன் தேங்கியுள்ள மழைநீரில் நெற்பயிர்கள் சாய்ந்து முளைக்க தொடங்கி விட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கருப்பசாமி, வைரவன் ஆகியோர் கூறியதாவது:-
காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையினால் இங்கு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து முளைத்து விட்டன.
நாங்கள் பயிர் சாகுபடி செய்ய நகைகளை அடகு வைத்து கடன் பெற்று உள்ளோம். கடன் வாங்கி கஷ்டப்பட்ட வளர்த்து வந்த நெற்பயிர்கள் எல்லாம் தற்போது பெய்த மழையினால் சாய்ந்து விட்டன. தண்ணீர் வயல்களில் தேங்கி நிற்பதால் முளைக்க ஆரம்பித்து விட்டது.
கடினப்பட்டு சாகுபடி செய்ய செலவுத்தொகையை கூட எடுக்க முடியாத நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியை பார்வையிட்டு சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.