செய்திகள்
கைது

திருப்பூரில் லாட்டரி விற்றவர் கைது

Published On 2020-12-21 09:29 IST   |   Update On 2020-12-21 09:29:00 IST
திருப்பூரில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் சந்திப்பு பகுதியில் 15 வேலம்பாளையம் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் சோளிபாளையத்தை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 40) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News