செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமி

ஜெருசலேம் செல்வதற்கான மானியம் உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

Published On 2020-12-21 00:49 IST   |   Update On 2020-12-21 00:49:00 IST
ஜெருசலேமிற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற  கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

கூட்டணி வேறு, கொள்கை வேறு, நாங்கள் கொள்கைப்படிதான் செயல்படுவோம். எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருப்பது தமிழகத்திற்கு பெருமை. 

கிறிஸ்தவர்கள் ஜெருசலேமிற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Similar News