செய்திகள்
கோப்புபடம்

சிவகாசியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

Published On 2020-12-20 19:31 IST   |   Update On 2020-12-20 19:31:00 IST
சிவகாசியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி திருத்தங்கல் சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் பவுன்ராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகன் மாரீஸ்வரன் (வயது 10). நேற்று காலை மாரீஸ்வரன் தனது வீட்டில் அறுந்து கிடந்த மின்சார வயரை தெரியாமல் தொட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி சிறுவன் மாரீஸ்வரன் பரிதாபமாக இறந்தான். 

இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அறுந்து கிடந்த மின்சார வயரை தெரியாமல் தொட்டு சிறுவன் மாரீஸ்வரன் இறந்த சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News