செய்திகள்
கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் - தந்தை, மகன் கைது
விருதுநகர் அருகே கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள வெள்ளூரைச்சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகள் பாண்டீஸ்வரி (வயது 20). கல்லூரி மாணவியான இவர் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தபோது முன்பகை காரணமாக அதே ஊரைச் சேர்ந்த கந்தசாமி (59), மற்றும் அவரது மகன் சரவணன் (27) ஆகிய இருவரும் பாண்டீஸ்வரியுடன் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தசாமி மற்றும் அவரது மகன் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.