செய்திகள்
கோப்புபடம்

அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய 479 பேர் மீது வழக்கு

Published On 2020-12-20 19:25 IST   |   Update On 2020-12-20 19:25:00 IST
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய 479 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு நெல்லை தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனத்தலைவர் கண்ணபிரான் பாண்டியன் தேவேந்திரகுல வேளாளர் என மத்திய, மாநில அரசுகள் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தியும், பட்டியல் இனத்தில் இருந்து நீக்கக் கோரியும் அனுமதி இல்லாமல் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தியதாக கூறைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பெண்கள் உள்பட 479 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News