செய்திகள்
தூசி அருகே தூக்குப்போட்டு இறைச்சிக்கடைக்காரர் தற்கொலை
தூசி அருகே சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த இறைச்சிக்கடைக்காரர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூசி:
வெம்பாக்கம் தாலுகா சோழவரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஷேக் முகமது. இவரது மகன் அப்துல்ரகுமான் (வயது 34) இறைச்சிக் கடை வைத்துள்ளார். இவர் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது கதவை உள்புறமாக தாழிட்டு விட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார்.
இவரது மனைவி மதினா ஜன்னல் வழியாக பார்த்தபோது இவருடைய கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று இவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது அப்துல்ரகுமான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து இறந்தவரின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார் இறந்தவருக்கு மதினா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.