செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு

ஆரணி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

Published On 2020-12-16 19:04 IST   |   Update On 2020-12-16 19:04:00 IST
ஆரணி அருகே குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த பல்லாந்தாங்கல் ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்தும் உடனடியாக குடிநீர் வழங்கக்கோரியும் கிராம மக்கள் நேற்று பகலில் வந்தவாசி நெடுஞ்சாலையில் பல்லாந்தாங்கல் கூட்டுரோடு அருகே காலி குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீசார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பல்லாந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம்வேல் ஆகியோர் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கடந்த அங்கு உள்ள மின் மோட்டார் பழுது அடைந்து உள்ளதாகவும் அதனை சரிசெய்ய முடியாத காரணத்தினால் தண்ணீர் வழங்க இயலவில்லை எனவும் சரி செய்யும் பணியை உடனடியாக முடித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News