செய்திகள்
காஞ்சியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே உள்ள காஞ்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காஞ்சி, புதுப்பாளையம், நம்மியந்தல், பெரியகுளம், கடலாடி, வில்வாரணி, சிறுகளாம்பாடி, மட்டவெட்டு, மேலபுஞ்சை மற்றும் காரப்பட்டு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செங்கம் மின்வாரிய செயற்பொறியாளர் கேசவராஜ் தெரிவித்து உள்ளார்.