செய்திகள்
தற்கொலை

வந்தவாசி அருகே டிரைவர் தற்கொலை

Published On 2020-12-16 18:34 IST   |   Update On 2020-12-16 18:34:00 IST
வந்தவாசி அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:

வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் வேலை செய்து வந்தார். போதைக்கு அடிமையான இவர் அடிக்கடி மது அருநதி விட்டு வருவார். இதனை மனைவி கண்டிப்பதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று இரவு குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்த இவர் மனைவியிடம் தகராறு செய்தார். இதை அவரது மனைவி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சதீஷ்குமார் வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சதீஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News