செய்திகள்
நெல் கொள்முதல்

மயிலாடுதுறையில் இருந்து ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் ரெயிலில் வந்தது

Published On 2020-12-16 01:53 GMT   |   Update On 2020-12-16 01:53 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், ஈரோடு மாவட்ட பொதுவினியோக திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டது.
ஈரோடு:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், ஈரோடு மாவட்ட பொதுவினியோக திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டது.

இதில் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் ஈரோட்டிற்கு வந்தது. இந்த ரெயிலில் உள்ள நெல் மூட்டைகள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலமாக நேற்று நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
Tags:    

Similar News