செய்திகள்
வாலிபர் கொடுத்த பூச்சி மருந்தை குடித்த பெண் கவலைக்கிடம்
என்னை திருமணம் செய்து கொள் அல்லது விஷத்தை குடி என மிரட்டல் விடுத்ததால் வாலிபர் கொடுத்த பூச்சி மருந்தை குடித்த பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 30). இவரது மனைவி 6 மாதத்திற்கு முன்பு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றவர், தற்போது பிரசவம் நடந்து குழந்தையுடன் அங்கே வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மாரீஸ்வரன், 21 வயது பெண்ணை காதலிப்பதாக மிரட்டி வந்து உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தன்னை திருமணம் செய்ய வேண்டும் என அவரிடம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
உடனே மாரீஸ்வரன், அந்த பெண்ணிடம், என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தால் நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனால் அவர் பயந்து போனார். பின்னர் அந்த பெண்ணை சந்தித்து, என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் என்னிடம் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷ பாட்டிலை) நீ குடிக்க வேண்டும் என்று மாரீஸ்வரன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன அந்த இளம்பெண், அவர் கொடுத்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரியவருகிறது். இதில் மயங்கி விழுந்து கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரனை கைது செய்தனர்.
சாத்தூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 30). இவரது மனைவி 6 மாதத்திற்கு முன்பு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றவர், தற்போது பிரசவம் நடந்து குழந்தையுடன் அங்கே வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மாரீஸ்வரன், 21 வயது பெண்ணை காதலிப்பதாக மிரட்டி வந்து உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தன்னை திருமணம் செய்ய வேண்டும் என அவரிடம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
உடனே மாரீஸ்வரன், அந்த பெண்ணிடம், என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தால் நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனால் அவர் பயந்து போனார். பின்னர் அந்த பெண்ணை சந்தித்து, என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் என்னிடம் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷ பாட்டிலை) நீ குடிக்க வேண்டும் என்று மாரீஸ்வரன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன அந்த இளம்பெண், அவர் கொடுத்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரியவருகிறது். இதில் மயங்கி விழுந்து கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரனை கைது செய்தனர்.