செய்திகள்
விருதுநகர் அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
விருதுநகர் அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் ருக்மணி (வயது 63). நோய்க்கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயசுதா (48) கொடுத்த புகாரின் பேரில் புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.