செய்திகள்
கோப்புபடம்

பெரணமல்லூர் அருகே கார் மோதி சிறுவன் பலி

Published On 2020-12-13 19:49 IST   |   Update On 2020-12-13 19:49:00 IST
பெரணமல்லூர் அருகே கார் மோதிய விபத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:

பெரணமல்லூர் அருகே உள்ள மோசவாடி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். அவரது மகன் அபிமன்யு (வயது 5). இவன், கோழிப்புலியூர் செல்லும் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தான். 

அப்போது அந்த வழியாக சென்ற கார் திடீரென அபிமன்யு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News